Showing posts with label உவமை எண்-1;இரக்கமற்ற பணியாளன் உவமை. Show all posts
Showing posts with label உவமை எண்-1;இரக்கமற்ற பணியாளன் உவமை. Show all posts

Monday, 29 October 2012

இரக்கமற்ற பணியாளன் உவமை

 1. இரக்கமற்ற பணியாளன் உவமை  ( Parable of the unforgiving servant )    
வேத வசனம்
லூக்கா 17 : 3 - 4 & மத்தேயு 18 : 21 - 35



இயேசுவின் சீடரான பேதுரு இயேசுவிடம் தன் சகோதரர்,சகோதரிகளுள் ஒருவர் தனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா? எனக் கேட்டப்போது பதிலாக ( இயேசு ) கூறிய உவமையாகும்அரசர் ஒருவர் தம் பணியாளர்களிடம் கணக்குக் கேட்க விரும்பினார். அவர் கணக்குப் பார்க்கத் தொடங்கியபொழுது, அவரிடம் பத்தாயிரம் தாலந்து கடன்பட்ட ஒருவனைக் கொண்டு வந்தனர். அவன் பணத்தைத் திருப்பிக் கொடுக்க இயலாத நிலையில் இருந்தான்.
 தலைவரோ, அவனையும் அவன் மனைவி மக்களோடு அவனுக்குறிய உடைமைகள் யாவற்றையும் விற்றுப் பணத்தைத் திருப்பி அடைக்க ஆணையிட்டார்.