Sunday, 16 June 2013

புளித்த மா உவமை

25.புளித்த மா உவமை (Parable of the Leaven)
வேத வசனம்
மத்தேயு 13:33, லூக்கா 13:20-21





இயேசு பரலோகராஜ்ஜியத்தை புளித்த  மாவிற்கு (ஈஸ்ட்) ஒப்பிடுகிறார்.
பெண் ஒருத்தி புளித்த மாவை எடுத்து முன்று மரக்கால் மாவில் பிசைந்து வைத்தாள். மாவு முழுவதும் புளிப்பேறியது. பரலோக ராஜ்ஜியம் இப்புளிப்புமாவுக்கு ஒப்பாகும்.








Sunday, 26 May 2013

புதையல் உவமை


24.புதையல் உவமை (பொக்கிஷம் உவமை ) Parable of the Hidden Treasure.

வேத வசனம் 

மத்தேயு 13:44 


                                                                                                                                                                                 

அன்றியும், பரலோகராஜ்யம் நிலத்தில் புதைந்திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாயிருக்கிறது;அதை ஒரு மனுஷன் கண்டு, மறைத்து, அதைப் பற்றிய சந்தோஷத்தினாலே போய், தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தைக் கொள்ளுகிறான்.






Friday, 24 May 2013

பரிசேயனும் பாவியும் உவமை

23.பரிசேயனும் பாவியும் உவமை(Pharisee and the Publican)

வேத வசனம்

லூக்கா 18:10-14


இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணுபம்படி தேவாலயத்துக்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், (பரிசேயர் எனப்படுபவர்கள் மத திருச்சடத்தை நன்கு படித்து தேர்ந்தவர்களாவார்கள்) மற்றவன் ஆயக்காரன்.(ஆயக்காரன் எனப்படுபவர்கள் வரிவசூலிப்பவர்.இவர்கள் தங்கள் தொழிலின் பொருட்டு பலரை வருத்தி வரி வசூலிப்பதால் சமுதாயத்தில் பாவிகளாக கொள்ளப்பட்டனர்.






Friday, 26 April 2013

பத்து கன்னியர் உவமை

22.பத்து கன்னியர் உவமை (Parable of the Ten Virgins)
வேத வசனம் : 
மத்தேயு 25:1-12.

இயேசுவின் இரண்டாம் வருகையை குறித்து சொல்லப்பட்ட உவமையாகும்.
அப்பொழுது, பரலோகராஜ்யம் தங்கள் தீவட்டிகளைப் (விளக்குகளைப்)பிடித்துக்கொண்டு மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப் புறப்பட்ட பத்துக் கன்னிகைகளுக்கு ஒப்பாயிருக்கும்.
அவர்களில் ஐந்துபேர் புத்தியுள்ளவர்களும், ஐந்துபேர் புத்தியில்லாதவர்களுமாயிருந்தார்கள்.




Monday, 15 April 2013

நேர்மையான பணியாள் உவமை

21.நேர்மையான பணியாள் உவமை(Parable of the Faithful Servant)
வேத வசனம்
மாற்கு 13:34-37, மத்தேயு 24:42-51, லூக்கா 12:35-40

ஒருமனுஷன் தன் வீட்டைவிட்டு, புறதேசத்துக்குப்போகும்போது, தன் ஊழியக்காரருக்கு அதிகாரங்கொடுத்து, அவனவனுக்குத் தன் தன் வேலையையும் நியமித்து, விழித்திருக்கும்படிக்குக் காவல்காரனுக்குக் கற்பிப்பான்.





அப்படியே நீங்களும் விழித்திருங்கள்; ஏனெனில், வீட்டெஜமான், சாயங்காலத்திலோ, நடுராத்திரியிலோ, சேவல் கூவும் நேரத்திலோ, காலையிலோ, எப்பொழுது வருவான் என்று நீங்கள் அறியீர்கள்.


நீங்கள் நினையாத வேளையில் அவன் வந்து, உங்களைத் தூங்குகிறவர்களாகக் கண்டுபிடியாதபடிக்கு விழித்திருங்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறதை எல்லாருக்கும் சொல்லுகிறேன், விழித்திருங்கள் என்றார்.

கருத்து

இவ்வுவமை இயேசுவின் இரண்டாவது வருகயை குறிக்கிறது. . இதனை மரணம் வரு முன்னர் இயேசு கூறிய போதனைகளை பின்பற்ற வேண்டும் என்ற பொருளிலும் கொள்ளலாம்.நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் (இயேசு) வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்,அவரது போதனைப் படி நடவுங்கள்,என்பது இவ்வுவமையின் கருத்தாகும்.


வேத வசனம்
மாற்கு 13:34-37


    34. ஒருமனுஷன் தன் வீட்டைவிட்டு, புறதேசத்துக்குப்போக எத்தனிக்கும்போது, தன் ஊழியக்காரருக்கு அதிகாரங்கொடுத்து, அவனவனுக்குத் தன் தன் வேலையையும் நியமித்து, விழித்திருக்கும்படிக்குக் காவல்காரனுக்குக் கற்பிப்பான்.
    For the Son of man is as a man taking a far journey, who left his house, and gave authority to his servants, and to every man his work, and commanded the porter to watch.

    35. அப்படியே நீங்களும் விழித்திருங்கள்; ஏனெனில், வீட்டெஜமான், சாயங்காலத்திலோ, நடுராத்திரியிலோ, சேவல் கூவும் நேரத்திலோ, காலையிலோ, எப்பொழுது வருவான் என்று நீங்கள் அறியீர்கள்.
    Watch ye therefore: for ye know not when the master of the house cometh, at even, or at midnight, or at the cockcrowing, or in the morning:

    36. நீங்கள் நினையாத வேளையில் அவன் வந்து, உங்களைத் தூங்குகிறவர்களாகக் கண்டுபிடியாதபடிக்கு விழித்திருங்கள்.
    Lest coming suddenly he find you sleeping.

    37. நான் உங்களுக்குச் சொல்லுகிறதை எல்லாருக்கும் சொல்லுகிறேன், விழித்திருங்கள் என்றார்.
    And what I say unto you I say unto all, Watch.


Sunday, 31 March 2013

இயேசு உயிர்த்தெழுந்தார்


2.இயேசு உயிர்த்தெழுந்தார்  (சிலுவை தியான வசனம் ) 
வேத வசனம்                                  
மத்தேயு 28:1-7; மாற்கு 16:1-8; லூக்கா 24:1-12; யோவான் 20:1-12;




Friday, 29 March 2013

ஏழு வார்த்தைகள்


1.ஏழு வார்த்தைகள் (சிலுவை தியான வசனம் )



1) மன்னிப்பு
"பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே" (லூக்கா 23 : 34)
மத்தேயு 6:14




Sunday, 24 March 2013

நேர்மையற்ற நடுவர் உவமை

20.நேர்மையற்ற நடுவர் உவமை (Parable of the Unjust Judge)                                        
வேத வசனம்
லூக்கா 18:1-8

ஒரு பட்டணத்திலே ஒரு நியாயாதிபதி இருந்தான்; அவன் தேவனுக்குப் பயப்படாதவனும் மனுஷரை மதியாதவனுமாயிருந்தான்.அந்தப் பட்டணத்திலே ஒரு விதவையும் இருந்தாள்; அவள் அவனிடத்தில்போய்: எனக்கும் என் எதிராளிக்கும் இருக்கிற காரியத்தில் எனக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று விண்ணப்பம்பண்னினாள்.வெகுநாள் வரைக்கும் அவனுக்கு மனதில்லாதிருந்தது. பின்பு அவன் நான் தேவனுக்குப் பயப்படாமலும் மனுஷரை மதியாமலும் இருந்தும்,




Sunday, 10 March 2013

நீதியற்ற வீட்டுப் பொறுப்பாளர் உவமை


19.நீதியற்ற வீட்டுப் பொறுப்பாளர் உவமை(Parable of the Unjust Steward)         
வேத வசனம் 
லூக்கா 16:1-13

ஐசுவரியவானாகிய ஒரு மனுஷனுக்கு ஒரு உக்கிராணக்காரன் (வீட்டுப் பொறுப்பாளர் )இருந்தான்; அவன் தன் எஜமானுடைய ஆஸ்திகளை அழித்துப்போடுகிறதாக எஜமானுக்கு அறிவிக்கப்பட்டது.
அப்பொழுது எஜமான் அவனை வரவழைத்து: உன்னைக்குறித்து நான் இப்படிக் கேள்விப்படுகிறதென்ன? உன் உக்கிராணக் கணக்கை யொப்புவி, இனி நீ உக்கிராணக்காரனாயிருக்கக்கூடாது என்றான்.




Sunday, 17 February 2013

நல்ல சமாரியன் உவமை


18.நல்ல சமாரியன் உவமை (Parable of the Good Samaritan)
வேத வசனம் 
லூக்கா 10:30-37

ஒரு மனுஷன் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகையில் கள்ளர் கையில் அகப்பட்டான்; அவர்கள் அவன் வஸ்திரங்களை உரிந்துகொண்டு அவனைக் காயப்படுத்தி, குற்றுயிராக விட்டுப் போனார்கள். அப்பொழுது தற்செயலாய் ஒரு ஆசாரியன் (குரு) அந்த வழியே வந்து,அவர் அவரைக் கண்டதும் மறு பக்கமாக விலகிச் சென்றார்.



Sunday, 3 February 2013

நல்லமேய்ப்பன் (நல்ல ஆயன் உவமை)


17.நல்லமேய்ப்பன்  (நல்ல ஆயன் உவமை ) Good Shepherd
வேத வசனம் 
யோவான்  10:11-18

நல்லமேய்ப்பன் ஆடுகளுக்குக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான் ,கூலிக்கு மேய்ப்பவர் ஓநாய் வருவதைக் கண்டு ஆடுகளை விட்டு விட்டு ஓடிப்போவார். ஏனெனில் அவர் மேய்ப்பன்  அல்ல ஆடுகள் அவருக்குச் சொந்தமும் அல்ல ஓநாய் ஆடுகளைப் பற்றி இழுத்துக்கொண்டு போய் மந்தையைச் சிதறடிக்கும். கூலிக்கு மேய்ப்பவருக்கு ஆடுகளைப்பற்றி கவலை இல்லை.



Sunday, 27 January 2013

திராட்சை தோட்ட வேலையாட்கள் உவமை


16.திராட்சை தோட்ட வேலையாட்கள் உவமை (Parable of the Workers in the Vineyard)
வேத வசனம் 
மத்தேயு 20:1-16 

திராட்சத்தோட்டத்துக்கு எஜமான் ஒருவர் தம் தோட்டதில் வேலையாள்களை தேடும் நோக்கில் அதிகாலையிலே புறப்பட்டான்.வேலையாட்களுடன் நாளொன்றுக்கு ஒரு பணம் கூலிபேசி, அவர்களைத் தன் திராட்சத்தோட்டத்துக்கு அனுப்பினான்பின்பு மூன்றாம் மணி வேளையிலும் அவன் புறப்பட்டுப்போய்,



Sunday, 20 January 2013

திராட்சை செடி உவமை


15.திராட்சை செடி உவமை (The Vine)
வேத வசனம் 
யோவான் 15:1-7

நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத் தோட்டக்காரர். என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார். நான் உங்களுக்குச் சொன்ன உபதேசத்தினாலே நீங்கள் இப்பொழுதே சுத்தமாயிருக்கிறீர்கள்.என்னில் நிலைத்திருங்கள்,






Sunday, 13 January 2013

தாலந்துகள் உவமை


14.தாலந்துகள் உவமை (Parable of the talents or minas)
வேத வசனம் 
மத்தேயு 25:14-30 
புறத்தேசத்துக்குப் பிரயாணமாய்ப் போகிற ஒரு மனுஷன் (எஜமான்),எஜமான் தன் ஊழியக்காரரை  அழைத்து, ஒவ்வொரு ஊழியக்காரரின் , திறமைக்குத்தக்கதாக, ஒருவனிடத்தில் ஐந்து தாலந்தும், ஒருவனிடத்தில் இரண்டு தாலந்தும், ஒருவனிடத்தில் ஒரு தாலந்தும், கொடுத்து, உடனே பிரயாணப்பட்டுப் போனான்.







Sunday, 6 January 2013

செல்வந்தனும் இலாசரசும் உவமை


13.செல்வந்தனும் இலாசரசும் உவமை (Rich man and Lazarus)
வேத வசனம் 
லூக்கா 16:19-31

இயேசு மரணத்திலிருந்து உயிர்ப்பித்ததாக வேதத்தில் கூறப்பட்டுள்ள லாசரும் இக்கதையில் (செல்வந்தனும் இலாசரசும் உவமை) வரும் இலாசரசும் ஒருவரல்ல. இவர்கள் இருவரும் வெவ்வேறு மனிதர்கள்.  இயேசுவின்  உவமைகளில் முக்கியமான ஒன்றாகும்.




Sunday, 30 December 2012

செம்மறியாடுகளும் வெள்ளாடுகளும் உவமை


12.செம்மறியாடுகளும் வெள்ளாடுகளும் உவமை (The Sheep and the Goats)
வேத வசனம் 
மத்தேயு 25:31-46 
செம்மறியாடுகளும் வெள்ளாடுகளும் உவமை ,உலக முடிவில் இயேசு திரும்ப வந்து நீதிமான்களையும், பாவிகளையும் பிரிப்பார்,இது வலை உவமையுடன் ஒத்த கருத்து, பொருளைக் கொண்டுள்ளது. வலை உவமை வரும் நாள்க்களில் காண்போம்!!ஓர் மேய்ப்பன் (ஆயர்) தமது மந்தையில் செம்றியாடுகளும் வெள்ளாடுகளும் கலந்து போயிருப்பதைக் கண்டு. செம்மறியாடுகளையும்,வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரித்துச் செம்மறியாடுகளை வலப்பக்கத்திலும் வெள்ளாடுகளை இடப்பக்கத்திலும் நிறுத்தினார்.



Sunday, 23 December 2012

கோதுமையும் களைகளும் உவமை

11.கோதுமையும் களைகளும் உவமை  (Parable of the Tares)


வேத வசனம் 
மத்தேயு 13:24-30 

வீட்டெஜமான் ( எஜமான் & பண்ணையாளர்)  ஒருவர் தம் வயலில் நல்ல விதைகளை விதைத்தார். அவருடைய வேலைக்காரர்  (பணியாள்கள் ) தூங்கும்போது அவனுடைய சத்துரு வந்து,  கோதுமைகளுக்கிடையே களைகளை விதைத்துவிட்டுப் போய்விட்டான். பயிர் வளர்ந்து கதிர் விட்டபோது களைகளும் காணப்பட்டன.









Sunday, 16 December 2012

கிழிந்த ஆடையும் பழந்துருத்தியும் உவமை

10.கிழிந்த ஆடையும் பழந்துருத்தியும் உவமை (New Wine into Old Wineskins)

வேத வசனம் 
லூக்கா 5:36-39, மாற்கு 2:18-22 


யோவானுடைய சீஷரும் பரிசேயருடைய சீஷரும் உபவாசம் பண்ணிவந்தார்கள்.  வர்கள் அவரிடத்தில் வந்து, யோவானுடைய சீஷரும் பரிசேயருடைய சீஷரும் உபவாசிக்கிறார்களே, உம்முடைய சீஷர் 







Sunday, 9 December 2012

காணாமல் போன காசு உவமை


9.காணாமல் போன காசு உவமை (Parable of the Lost Coin)


வேத வசனம் 
லூக்கா 15 : 8 - 10


இது இயேசுவை பரிசேயர் இயேசுவை பாவிகளுடன் சேர்ந்து அவர்களுக்கு போதிக்கிறார் என குற்றஞ்சாட்டியபோது, மனம் திரும்புதல் பற்றி கூறிய மூன்று உவமைகளில் இரண்டாவதாகும்.  நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப் பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்பதை வழியுறுத்து முகமாக கூறப்பட்டது. காணாமல் போன ஆடு உவமை, ஊதாரி மைந்தன் உவமை என்பவற்றுடன் ஒரே பொருளை கொண்டிருக்கிறது.








Sunday, 2 December 2012

காணாமல் போன ஆடு உவமை


8.காணாமல் போன ஆடு உவமை  ( Parable of the Lost Sheep)


வேத வசனம் 

லூக்கா 15:1-7 

இயேசு மனம் திரும்புதல் பற்றி கூறிய மூன்று உவமைகள்
(i)காணாமல் போன ஆடு உவமை ( ii)காணாமல் போன காசு உவமை(iii)ஊதாரி மைந்தன் உவமை

காணாமல் போன ஆடு உவமை இயேசு  கூறியமுதலாவது உவமை ஆகும். காணாமல் போன ஆடு உவமை  ,காணாமல் போன காசு உவமை,ஊதாரி மைந்தன் உவமை என்பவை  ஒரே பொருளை கொண்டிருக்கிறது.

சகல ஆயக்காரரும் பாவிகளும் அவருடைய வசனங்களைக் கேட்கும்படி அவரிடத்தில் வந்து சேர்ந்தார்கள்.அப்பொழுது பரிசேயரும் வேதபாரகரும் முறுமுறுத்து: இவர் பாவிகளை ஏற்றுக்கொண்டு அவர்களோடே சாப்பிடுகிறார் என்றார்கள்.அவர்களுக்கு அவர் சொன்ன உவமையாவது