Sunday 23 December 2012

கோதுமையும் களைகளும் உவமை

11.கோதுமையும் களைகளும் உவமை  (Parable of the Tares)


வேத வசனம் 
மத்தேயு 13:24-30 

வீட்டெஜமான் ( எஜமான் & பண்ணையாளர்)  ஒருவர் தம் வயலில் நல்ல விதைகளை விதைத்தார். அவருடைய வேலைக்காரர்  (பணியாள்கள் ) தூங்கும்போது அவனுடைய சத்துரு வந்து,  கோதுமைகளுக்கிடையே களைகளை விதைத்துவிட்டுப் போய்விட்டான். பயிர் வளர்ந்து கதிர் விட்டபோது களைகளும் காணப்பட்டன.








வீட்டெஜமானுடைய வேலைக்காரர் அவனிடத்தில் வந்து, ஆண்டவனே, நீர் உமது நிலத்தில் நல்ல விதையை விதைத்தீர் அல்லவா? பின்னை அதில் களைகள் எப்படி உண்டானது என்றார்கள். அதற்கு அவர்,'' இது சத்துருடைய வேலை'' என்றார். உடனே வேலைக்காரர் அவரிடம்,''நாங்கள் போய் அவைகளைப் பிடுங்கிப்போட உமக்குச் சித்தமா'', என்று கேட்டார்கள்.


அதற்கு அவன் வேண்டாம், களைகளைப் பிடுங்கும்போது அவற்றோடு சேர்த்துக் கோதுமையையும் நீங்கள் பிடுங்கி விடக்கூடும். அறுவடைவரை இரண்டையும் வளர விடுங்கள்,


 அறுப்புக்காலத்தில் நான் அறுக்கிறவர்களை நோக்கி: முதலாவது களைகளைப்பிடுங்கி, அவைகளைச் சுட்டெரிக்கிறதற்கு கட்டுகளாகக் கட்டுங்கள்,கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்துவையுங்கள் என்பேன் என்று சொன்னான் என்றார்.

                                                                                            


கருத்து

இங்கு வீட்டெஜமான் இயேசுவாகும்.  வேலைக்காரர்   தேவதூதர் ஆவர். கோதுமை நீதிமான்களை  குறிக்கிறது.  களைகள் பாவிகளையும் குறிக்கிறது.
இது உலகின் முடிவில் நடக்க இருக்கும் நீதிமான்களை பாவிகளிடமிருந்து பிரிக்கும் நிகழ்வை விளக்குகிறது. இங்கு களைகளும் இறுதி நாள் வரை விடப்படுகிறது இதன் மூலம் கடவுள் பாவிகளுக்கு இறுதிநாள் வரை மனம் மாற சந்தர்ப்பத்தை கடவுள் கொடுத்துள்ளார் என்பதை குறிக்கிறது,என்பது இதன்  கருத்தாகும்.

வேத வசனம் 
மத்தேயு 13:24-30 



24. வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட நல்ல விதையை விதைத்த மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது.

Another parable put he forth unto them, saying, The kingdom of heaven is likened unto a man which sowed good seed in his field:

25. மனுஷர் நித்திரை பண்ணுகையில் அவனுடைய சத்துரு வந்து, கோதுமைக்குள் களைகளை விதைத்துவிட்டுப் போனான்.

But while men slept, his enemy came and sowed tares among the wheat, and went his way.

26. பயிரானது வளர்ந்து கதிர் விட்டபோது, களைகளும் காணப்பட்டது.

But when the blade was sprung up, and brought forth fruit, then appeared the tares also.

27. வீட்டெஜமானுடைய வேலைக்காரர் அவனிடத்தில் வந்து: ஆண்டவனே, நீர் உமது நிலத்தில் நல்ல விதையை விதைத்தீர் அல்லவா? பின்னை அதில் களைகள் எப்படி உண்டானது என்றார்கள்.

So the servants of the householder came and said unto him, Sir, didst not thou sow good seed in thy field? from whence then hath it tares?

28. அதற்கு அவன்: சத்துரு அதைச் செய்தான் என்றான். அப்பொழுது வேலைக்காரர்: நாங்கள் போய் அவைகளைப் பிடுங்கிப்போட உமக்குச் சித்தமா? என்று கேட்டார்கள்.

He said unto them, An enemy hath done this. The servants said unto him, Wilt thou then that we go and gather them up?

29. அதற்கு அவன் வேண்டாம், களைகளைப் பிடுங்கும்போது நீங்கள் கோதுமையையுங்கூட வேரோடே பிடுங்காதபடிக்கு இரண்டையும் அறுப்பு மட்டும் வளரவிடுங்கள்.

But he said, Nay; lest while ye gather up the tares, ye root up also the wheat with them.

30. அறுப்புக்காலத்தில் நான் அறுக்கிறவர்களை நோக்கி: முதலாவது களைகளைப்பிடுங்கி, அவைகளைச் சுட்டெரிக்கிறதற்கு கட்டுகளாகக் கட்டுங்கள்; கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்துவையுங்கள் என்பேன் என்று சொன்னான் என்றார்.

Let both grow together until the harvest: and in the time of harvest I will say to the reapers, Gather ye together first the tares, and bind them in bundles to burn them: but gather the wheat into my barn.

 தொடரும்........

  பதிவு: 12








0 மறுமொழிகள்:

Post a Comment

பதிவு குறித்த தங்களது மேலான கருத்துக்கள் வரவேக்கப்படுகின்றன!